Home இலங்கை ராமேஸ்வரத்துக்கு கடத்தப்பட்ட  பல கோடி    பெறுமதியான தங்கக்கட்டிகள் மீட்பு.

ராமேஸ்வரத்துக்கு கடத்தப்பட்ட  பல கோடி    பெறுமதியான தங்கக்கட்டிகள் மீட்பு.

by admin

மன்னார் கடல் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு  கடத்தப்பட்ட  இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க கட்டிகளை இன்று புதன்கிழமை (29) காலை சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மன்னார் கடல் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு தங்க கட்டிகளை கடத்தல்காரர்கள் கடத்தி வருவதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதி வேகமாக சந்தேகத்துக்கிடமாக வந்த  மீன்பிடி படகை     மறிக்க  முற்பட்ட போது  படகில் இருந்தவர்கள் படகை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றதனால்     சுங்கத்துறை அதிகாரிகள் நடுக்கடலில் துப்பாக்கியால்  படகை நோக்கி நோக்கி சுட்டதாக வும்  இதையடுத்து கடத்தல் காரர்கள்   படகை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து  கடத்தல் காரர்கள் விட்டு விட்டு சென்ற படகில் இருந்து 3 கிலோ கடத்தல் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து  விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மேலும் கடத்தல்காரர்கள் விட்டு   சென்ற பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது  மேலும் 5 கிலோ எடை கொண்ட   தங்கக் கட்டிகளை மீட்டுள்ளனர்.

இதையடுத்து ஒரே நாளில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்திய மதிப்பிலான 5  கோடி ரூபாய் பெறுமதியான 8 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More