Home இலங்கை யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறி

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறி

by admin

யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இரவு வேளைகளில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  யாழ்.நகர் பகுதியை அண்டிய முட்டாஸ்கடை சந்தி பகுதிகளில் இரவு வேளைகளில் , வீதியில் பயணிப்போரை வழிமறிக்கும் போதை ஆசாமிகள் , அவர்களை மிரட்டி , பணப்பையில் (பேர்ஸில்) இருக்கும் பணத்தை வழிப்பறி செய்து வருகின்றனர்.
காங்கேசன்துறை வீதி – ஸ்ரான்லி வீதி ஆகிய இரு பிரதான வீதிகளும் சந்திக்கும் சந்தி பகுதியான குறித்த சந்தியில் மின் விளக்குகள் பொருத்தப்படாமையால் , இருளில் மறைந்து இருக்கும் போதை ஆசாமிகள் , வீதியில் தனியாக மோட்டார் சைக்கிள் ,சைக்கிளில் பயணிக்கும் நபர்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேர்ஸில் இருக்கும் சிறு தொகை பணத்தினை மட்டுமே கொள்ளையடித்து வருவதனால் , பாதிக்கப்பட்டவர்கள்  காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்ய பின்னடிக்கின்றனர். இதனால் போதை ஆசாமிகளின் வழிப்பறி கொள்ளை  நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது.
அதனால் சந்தி பகுதியில் மின் விளக்குகளை பொருத்துவதற்கு யாழ்.மாநகர சபையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , யாழ்ப்பாண  காவல்துறையினர் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More