Home இலங்கை யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து மிரட்டிய கும்பல்

யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து மிரட்டிய கும்பல்

by admin

 

யாழில். ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டுக்கு கும்பல் ஒன்று சென்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக கோப்பாய்  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை , முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 06 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து , தனக்கு தாக்க முற்றப்பட்ட போது , அயலவர்கள் கூடியமையால் , தாக்குதல் முயற்சியை கைவிட்டு , மரண அச்சுறுத்தல் விடுத்து விட்டு , அங்கிருந்து சென்றதாக, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியாகி இருந்த நிலையில் , அதனை அகற்ற கோரியே குறித்த கும்பல் மிரட்டியது என பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.  முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More