Home இலங்கை கடந்த இரு தினங்களில் 12 பேர் காணாமல் போயுள்ளனா்

கடந்த இரு தினங்களில் 12 பேர் காணாமல் போயுள்ளனா்

by admin

 

இலங்கையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும்  12 பேர் காணாமல் போயுள்ளனதாக காவல்துறையினா். தெரிவித்துள்ளனர். இதில்  4 சிறுவர்களும் உள்ளடங்குவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

பொரலஸ்கமுவ – வெரஹெர பிரதேசத்தைச் சோ் ந்த  15 வயது சிறுவன், கிளிநொச்சி – தர்மபுரத்தைச்    சோ் ந்த 16 வயது சிறுவன்,  ஹற்றன் – பொல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, யடியன தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவா் என 4  சிறுவா்கள்  காணாமல் போயுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , காணாமல்   நுவரெலியாவைச் சேர்ந்த 18 வயது யுவதி , பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் , எடரமுல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞா் ஆகியோரும்  அடங்குவதாக  காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும்  நோர்வூட்டைச் சேர்ந்த 82 வயதான பெண் , மொறட்டுவையைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண், பள்ளம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான தொழிலாளி  ஒருவா்  கஹதுடுவ பிரதேசத்தைச் சோ்ந்த  65 வயதுடைய ஆண்  ஆகியோரும் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More