Home இலங்கை கடற்படை சிப்பாய்  சடலமாக மீட்பு.

கடற்படை சிப்பாய்  சடலமாக மீட்பு.

by admin


மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் இன்றைய  தினம் வியாழக்கிழமை (4) காலை  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடற்படை முகாமிற்கு வெளியில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட  கடற்படைச் சிப்பாய் 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது.

முள்ளிக்குளம் கடைப்படை முகாமில் உள்ள கடற்படையினரின் விடுதியில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன்  வாழ்ந்து வந்துள்ள குறித்த கடற்படை சிப்பாய் கடந்த இரண்டாம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம்   கடற்படை முகாமில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற நிலையில்    மீண்டும் முகாமிற்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது கணவர் காணாமல் போனமை குறித்து அவரது மனைவி நேற்றைய தினம் புதன்கிழமை (3) சிலாபத்துறை  காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த  நிலையிலே   இன்று (4) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்  சிலாபத்துறை  காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More