Home இலங்கை யாழில். ஆணின் சடலம் மீட்பு – சம்பவ இடத்தில் விசாரணை

யாழில். ஆணின் சடலம் மீட்பு – சம்பவ இடத்தில் விசாரணை

by admin
யாழ்ப்பாணம் – சட்டநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து, நேற்றைய தினம் வியாழக்கிழமை  சந்தேகத்திற்கு இடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டவாின் வீட்டில் , சட்ட வைத்திய அதிகாரி , தடயவியல்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அப்பகுதியை சேர்ந்த விஸ்வநாதப்பிள்ளை யோகேந்திரன் (வயது 62) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.  குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவ இடத்தில் இன்றைய தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More