Home இலங்கை பியத் நிகேஷலவிற்கு பிணை

பியத் நிகேஷலவிற்கு பிணை

by admin

 

கைது செய்யப்பட்ட  குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்  கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் இன்று(31) உத்தரவிட்டுள்ளது.     சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய  வாக்குமூலம்  வழங்குவதற்காக  (29) கொழுநேற்று முன்தினம்  குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு  சென்ற போது அவா்  கைது செய்யப்பட்டிருந்தாா்.

பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்தமை, அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியமை, பொதுமக்களை ஆத்திரமடையச் செய்யும் வகையிலான காணொளிகளை வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்   கைது செய்யப்பட்ட அவரை  நேற்று(30) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது   இன்று(31) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.

குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு கோட்டை பிரதான நீதவான், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More