Home இலக்கியம் பொன். அருணாச்சலத்தின் தண்ணொளிர்வில்… அல்லது நினைவு நூற்றாண்டு 2024ல்; நல்லது வேண்டும்!

பொன். அருணாச்சலத்தின் தண்ணொளிர்வில்… அல்லது நினைவு நூற்றாண்டு 2024ல்; நல்லது வேண்டும்!

சி.ஜெயசங்கர்

by admin

 

சமுத்திரம் சூழ்ந்த முத்து
அழகிய இலங்கைத் தீவு
நல்விதை அழித்து
நாசவிதை வளர்த்த
நவீன
அநாகரீக அரசியல்
வெடித்துச் சிதறி
இலங்கைத் தீவைப்
பற்றியது
இனவாதப் பெருநெருப்பு

இன்னமும்
எரித்தெரித்து
இனவாதச் சிந்தனைகளில்
குளிர் காயும் அரசியல்
எழுதப்படாத யாப்பாக
கொலு வீற்றிருந்து அழிக்கிறது

சமுத்திரம் சூழ்ந்த முத்து
அழகிய இலங்கைத் தீவு
பசுமை வளத்தின் நிலப்பரப்பு
ஊதியூதி அணையவிடாப்
பெருநெருப்பில்
இன்னமும்
எரிந்தபடி
எரித்தபடி
ஆழப் புதைத்து
அகழப்படாது

ஆயினும் சிறு ஊற்றாய்
இன்னமும் சுரந்தபடி
மெய்யறிவு

பொன்.அருணாச்சலத்தின்
நினைவுகளை மீட்டலில்
மீளக் கொணர்தலில்
சிறு ஊற்றின் பெருக்கெடுப்பு
கொடுந்தீ அணைக்கும்

சமுத்திரம் சூழ்ந்த முத்து
அழகிய இலங்கைத் தீவு
பசுமை வளத்தின் நிலப்பரப்பில்
அதன் மக்கள் ஆனந்தக் கூத்தாடுவர்

சி.ஜெயசங்கர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More