Home இலங்கை தேரர் படுகொலை – சந்தேகநபர் சுட்டுக் கொலை!

தேரர் படுகொலை – சந்தேகநபர் சுட்டுக் கொலை!

தெற்கை அதிரவைக்கும் துப்பாக்கிச் சூடுகளும் மரணங்களும் - மூவர் சுட்டுக்கொலை!

by admin

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் காவற்துறையிர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ காவல்  நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தேக நபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தெற்கை அதிரவைக்கும் துப்பாக்கிச் சூடுகளும் மரணங்களும் – மூவர் சுட்டுக்கொலை!

அம்பலாங்கொடை கலகொட பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் காயமடைந்து பலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர்  தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற  இருவர் அம்பலாங்கொடை கலகொட பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றினுள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, காலி – எல்பிடிய, பிடிகல பகுதியில் நேற்று  இரவு (11.02.24)  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (11.03.24) இடம்பெற்ற இந்த அனர்த்தங்களால் மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More