Home இலங்கை யாழில் பட்டதாரிகள் போராட்டம்

யாழில் பட்டதாரிகள் போராட்டம்

by admin

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்பை வழங்க வேண்டுமென கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தினால் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பலவருட கனவு வெறும் கனவாகவே போய் விடுமா, எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து  தமக்கான வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளானர். அதேவேளை கோரிக்கைகளை வலியுறுத்தி அரசியல்வாதிகளுக்கும் மகஜரின் பிரதிகளை அனுப்பி வைக்க உள்ளதாகவும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More