Home இலங்கை வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் வள்ளுவர் விளையாட்டு கழகம் சாதனை

வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் வள்ளுவர் விளையாட்டு கழகம் சாதனை

by admin

 

வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டியில் மன்னார் மாவட்ட அணி மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறது. வடக்கு மாகாண கயிறு இழுத்தல் போட்டிகள் நேற்றைய தினம் (05) வவுனியாவில் இடம் பெற்றது.மாவட்ட ரீதியில் பல அணிகள்  ஆண்கள்/பெண்கள்  குறித்த போட்டியில் பங்கு பற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அணி குறித்த போட்டியில் பங்கு பற்றி ஆண்கள் அணி மூன்றாம் இடத்தினையும், பெண்கள் அணி நான்காம் இடத்தினையும் பெற்றிருக்கின்றனர்.

மன்னார் மாவட்டம் சார்பாக குறித்த போட்டியில் பங்கு பற்ற மன்னாரை சேர்ந்த எந்த வீரர்களும் தயாராக இல்லாத நிலையில் மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் – மேற்கு கிராமத்தை சேர்ந்த வள்ளுவர் விளையாட்டு கழக வீரர்கள் ( ஆண்கள்/பெண்கள் ) எந்த வித முன்னாயித்தம், மற்றும் பயிற்சி இல்லாமல் மாவட்டம் சார்பாக பங்கு பற்றி மூன்றாம் (ஆண்கள்) மற்றும் நான்காம் (பெண்கள்) இடத்தினை பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மடு பிரதேச விளையாட்டு அதிகாரி பிறிட்டோ அவர்களின்   முயற்சி மற்றும் துணிச்சலான முடிவாலே இது சாத்தியமானது என குறித்த போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More