Home இலங்கை யாழில். 30 கி.கி கேரளா கஞ்சா மீட்பு; இருவர் கைது

யாழில். 30 கி.கி கேரளா கஞ்சா மீட்பு; இருவர் கைது

by admin

 

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை  காவல்துறையினர் மீட்டுள்ளதுடன், இருவரை கைது செய்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக  காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திடீர் சோதனை நடவடிக்கையினை மருதங்கேனி பகுதியில் முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 35 வயதுடைய இரு நபர்களை கைது செய்துள்ளமையுடன் அவர்களிடமிருந்து  30 kg 500g கேரளா கஞ்சாவினை போதைப்பொருள் ஒழிப்பு  காவல்துறை   பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா ஆகியவை மருதங்கேனி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை  காவல்துறையினர்  முன்னேடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More