Home இலங்கை சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சகோதரி

சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சகோதரி

by admin

 

யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் சகோதரன் உள்ளிட்ட கும்பல் ஒன்றினால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான  காவல்துறை விசாரணையில் , சகோதரன் மாத்திரமே சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், தாய் தந்தையை இழந்த பின்னர் , சகோதரியுடன் வடமராட்சி பகுதியில் உள்ள பெண்கள் காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த நிலையில் , சகோதரி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து , சகோதரன் காப்பகத்தில் இருந்த தனது சகோதரியை , வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் அழைத்து வந்துள்ளார்.  ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரையில் சகோதரிக்கு போதை ஊசியினை செலுத்தியும் , மதுபானம் உள்ளிட்டவற்றை கொடுத்தும் தொடர்ச்சியாக   வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
ஏப்ரல் மாதம் பெண்ணின் உடல் நிலை மோசமடைந்தமையை அடுத்து மீண்டும் காப்பகத்தில் அவரை சேர்த்துள்ளார். அங்கு பெண்ணின் உடல் நிலை மோசமானதை அடுத்து , பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் பெண்  வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்தமையையும் , சித்திரவதைகளுக்கு உள்ளானமையும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , யாழ்ப்பாணம்  காவல் நிலைய பெண்கள் சிறுவர் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தில் , தன்னை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்றே வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார். காவல்துறையினரின் தொடர் விசாரணைகளின் போது , சம்பவத்துடன் பெண்ணின் சகோதரனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தன்னை சகோதரனே   வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததாகவும் , வேறு நபர்கள் எவரும் சம்பந்தப்படவில்லை எனவும் , சகோதரன் மீதான பயத்திலையே முன்னர் அவ்வாறு வாக்குமூலம் அளித்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More