Home இலங்கை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைது செய்யப்பட்டவா்களுக்கு பிணை

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைது செய்யப்பட்டவா்களுக்கு பிணை

by admin

 

கடந்த 12 ஆம் திகதி சேனையூர் பிள்ளையார் கோவிலில் வைத்து  ,முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக,சம்பூர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களை  விடுவித்த  நீதிமன்றம் வழக்கினை இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது

சமூக செயற்பாட்டாளர் கமலேஸ்வரன் விஜிதா (வயது 40),  பல்கலைக்கழக மாணவி கமலேஸ்வரன் தேமிலா (வயது 22), சமூக செயற்பாட்டாளர் செல்வவினோத்குமார் சுஜானி (வயது 40), தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் நவரெட்ணராஜா ஹரிஹரகுமார் (வயது 43)  ஆகிய நால்வருமே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனா்.

சம்பூர் காவல்துறையினர் இவ் வழக்கை ஐ.சி.சி.பீ.ஆர்.சட்டத்தின் கீழ் முன்வைத்திருந்த நிலையில் நேற்று  எதிராளிகள் தரப்பினால் , இவ் வழக்கு மீளவும் நகர்த்தல் பத்திரம் மூலம்  அழைக்கப்பட்ட போது தாம் முன்னர் முன்வைத்த சட்டப்பிரிவின் அடிப்படையிலான குற்றச்சாட்டை  விலக்கிக் கொள்வதாக சம்பூர் காவல்துறையினர்  நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

 

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More