Home இலங்கை குடும்பநல உத்தியோகஸ்தர்களின் வெற்றிடங்களை நிரப்புங்கள்

குடும்பநல உத்தியோகஸ்தர்களின் வெற்றிடங்களை நிரப்புங்கள்

by admin

 

சங்கானை பிரதேசத்தில் 18 குடும்பநல உத்தியோகஸ்தர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் 12 உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுவதால் , சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆளணி பற்றாக்குறை நிலவுவதால்  , சேவைகளை வினைத்திறனுடன் ஆற்றவதில் , சேவையில் உள்ள உத்தியோகஸ்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதனால் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களின் நலன்கள் கேள்விக்குள்ளாகும் நிலைமைகள் காணப்படுவதனால் , பணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More