Home இலங்கை இந்தியாவிலிருந்து தலைமன்னாருக்கு சட்ட விரோதமாக  சென்ற   5 பேர் கைது-

இந்தியாவிலிருந்து தலைமன்னாருக்கு சட்ட விரோதமாக  சென்ற   5 பேர் கைது-

by admin

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு  சென்ற இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை(3)காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள்  விசாரணைக்கு  பின்னர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் தாழ்வுபாடு,தலைமன்னார்,வவுனியா,கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37,39,24,26 மற்றும் 38 வயதுடைய ஆண்கள் என தெரிய வந்துள்ளது.

குறித்த 5 பேரும் இலங்கையில் இருந்து  இந்தியாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் சென்று இந்தியாவின்  பல்வேறு இடங்களில் வசித்து வந்த   நிலையில் குறித்த 5 பேரும் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு  சென்ற போதே  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 5 சந்தேக நபர்கள் தற்போது தலைமன்னார் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதோடு,விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில்  முற்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More