Home இலங்கை யாழில். 28 மில்லியன் ரூபாய் கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழில். 28 மில்லியன் ரூபாய் கஞ்சாவுடன் இருவர் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் சுமார் 28 மில்லியன் ரூபாய் பெறுமதியான 70 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மருதங்கேணி காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை கடற்படையினரின் படகு வழி மறித்த போது , படகில் பயணித்தவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை கடலில் நீண்ட தூரம் துரத்தி சென்று மணற்காடு கடற்பகுதியில் படகினை கடற்படையினர் மடக்கி பிடித்தனர்.

படகினை சோதனையிட்ட போது , அதனுள் இருந்து 70 கிலோ கேரளா கஞ்சாவை மீட்டதுடன் , வடக்கில் இருந்து கட்டைக்காடு பகுதியை சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இரு நபர்களையும் கைது செய்தனர். மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரையும் , அவர்களின் படகினையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி காவற்துறையிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More