Home இலங்கை சட்டவிரோத கொல்களம் முற்றுகை – மாடுகள் மீட்பு

சட்டவிரோத கொல்களம் முற்றுகை – மாடுகள் மீட்பு

by admin

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத கொல்களத்தை முற்றுகையிட்ட சாவகச்சேரிப் காவல்துறையினர் இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்டுள்ளனர். அதேவேளை மாடுகளை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளதுடன் , நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரிக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில் வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு பின்னர் காவல்துறையினர் குறித்த சட்டவிரோத கொல்களத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது சாவகச்சேரி- மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஒரு மாட்டினை காவல்துறையினர் மீட்டதுடன்-ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரிக் காவல்  நிலையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.

சம்பவம் தொடர்பில்  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More