Home உலகம் அமெரிக்கா ஜனாதிபதியின் மகன் குற்றவாளி எனத் தீா்ப்பு

அமெரிக்கா ஜனாதிபதியின் மகன் குற்றவாளி எனத் தீா்ப்பு

by admin

 

அமெரிக்கா ஜனாதிபதி  ஜோ  பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது .    கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக  இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகளின் மீதான விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில்  ஹண்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகளும் , மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகளும்  என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை ஹண்டர் பைடனுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு ள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

எனினும் அவரது தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு 120 நாட்களில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள   நிலையில், அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

இதேவேளை  இந்த தீர்ப்பு  குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பைடன், நீதிமன்றம் வழங்கிய  தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள அதேவேளை   தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும்  தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More