Home இலங்கை நீரில் மூழ்கி மருத்துவத்துறை மாணவன் உயிாிழப்பு

நீரில் மூழ்கி மருத்துவத்துறை மாணவன் உயிாிழப்பு

by admin

 

இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி மருத்துவத்துறை மாணவன் ஒருவா்  உயிரிழந்துள்ளாா். காரைதீவைச் சேர்ந்த  சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவனே இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.

குடும்பத்தில்  ஒரேயொரு பிள்ளையான இவா்   காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இருந்து  இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள்   ஒருவராவார்.

இவர் அண்மையில் வெளியான   க.பொ.த உயா்தரப் பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகி யிருந்தார்.

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரிசனம் செய்து விட்டு இன்று   காலை திரும்பி வரும்பொ போது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள  நீலகிரி ஆற்றிலே நீராடிய போது மூழ்கி  உயிாிழந்துள்ளாா்.

அவரது பூதவுடல் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More