Home இலங்கை 42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்

42 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்

by admin
 

42 பேர் கண்டி, போகம்பறை சிறைச்சாலையில் வைத்து   தூக்கிலிடப்பட்டுள்ளனர் என நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு, மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ இன்று (18)  நாடாளுமன்றத்தில்  தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில்   வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில்,  நாடாளுமன்ற   உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே  அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.

1959 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரையில்  31 பேரும்  1969 ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரையில் 42 பேரும்  தூக்கிலிடப்பட்டுள்ளனர் எனத் தொிவித்துள்ள அவா்  அதற்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை அமுலில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளாா்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More