Home இலங்கை யாழ் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன் தாயாரிடம் ஒப்படைப்பு

யாழ் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன் தாயாரிடம் ஒப்படைப்பு

by admin

 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து ,  காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவன் , தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தாா். .
சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவா் எனவும் , அவரது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும் , இங்கு இலங்கையை சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதேவேளை , சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு , கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார்.
 யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால் , காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளாா் .
சிறுவனின் தாயை காவல்துறையினர் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை செய்த வேளை சிறுவன் செய்யும் தவறுகளுக்குத்தான் சிறுவனை தண்டிப்பதாக கூறியுள்ளார்.
அதனை அடுத்து சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த காவல்துறையினர் , சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More