Home இலங்கை யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல்

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல்

by admin

 

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்கள் மூன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்களில் கடந்த 19ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதன் போது, வண்ணார் பண்ணை மற்றும் நல்லூர் பகுதிகளில் இயங்கி வந்த உணவு கையாளும் நிலையங்கள் மூன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த நிலையில் அவற்றுக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , உணவு கையாளும் நிலையங்களில் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரை அவற்றை சீல் வைத்து மூடுமாறு மன்று உத்தரவிட்டது.  மன்றில் உத்தரவுக்கு அமைய பொது சுகாதார பரிசோதகரினால் அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More