Home இலங்கை யாழில். ஒன்றரை மாத குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை!

யாழில். ஒன்றரை மாத குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை!

by admin

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாதக் குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை காவற்துறையினர் தொிவித்துள்ளனா்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாயை், குழந்தையை வளர்த்த இருவர், குழந்தையின் தந்தை ஆகியோரை  தெல்லிப்பழை காவற்துறையினர் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.

குழந்தை பால் குடிக்க மறுத்தமையால் கைகால்களை திருகினேன்

குழந்தை பால் குடிக்க மறுத்து அடம்பிடிப்பதால் , குழந்தையின் கைகால்களை திருகியதாக தாயார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையொன்று நேற்று முன்தினம்  உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை நேற்றைறைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வேளை, குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை , தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை , உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்நிலையில் குழந்தையின் தாயார், மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸ் விசாரணையில் குழந்தை பால் குடிக்க மறுப்பதால் , கைகள் கால்களை திருகினேன். ஆனால் எனது குழந்தையை நான் கொலை செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

காவற்துறையினர் தாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை குழந்தையின் தந்தையையும் , குழந்தையை பராமரிக்க வீட்டிற்கு வந்து சென்ற பெண்ணொருவரையும் காவற்துறை  காவலில் வைத்து விசரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குழந்தையின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை நீதிமன்றில் பாரப்படுத்திய பின்னரே , நீதிமன்ற உத்தரவின் பேரிலையே குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

யாழில். ஒன்றரை மாத குழந்தை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை

யாழ்ப்பாணத்தில் ஒன்றரை மாத குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிக்கப்பட்டு , சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, தலையில் பலமாக தாக்கப்பட்டதில் குழந்தை உயிரிழந்துள்ளது.

அளவெட்டி பகுதியை சேர்ந்த சசிரூபன் நிகாஸ் என்ற ஒன்றரை மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின்னர் குழந்தை அசைவற்று கிடந்ததாக குழந்தையின் தாய் குழந்தையை அளவெட்டி வைத்தியசாலைக்கு கடந்த   சனிக்கிழமை கொண்டு சென்றுள்ளார்.

குழந்தையை அங்கிருந்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றிய போது, குழந்தை உயிரிழந்துள்ளது.

குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , உட்கூற்று பரிசோதனை நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட வேளை, குழந்தையின் கைகள் மற்றும் கால்கள் முறிந்து இருந்தமை, தலையில் அடிகாயங்கள் காணப்பட்டமை, காதிலும் மெல்லிய கம்பியினால் துளையிட்ட அடையாளங்கள் உள்ளிட்டவற்றுடன், உடலில் கண்டல் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணம் இயற்கை மரணம் அல்ல என உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தையின் தந்தை வெளியூரில் தங்கி இருந்து வேலை செய்வதாகவும், தாயின் பராமரிப்பிலையே குழந்தை இருந்துள்ளதாக காவற்துறை  விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள தெல்லிப்பளை காவற்துறையினர் குழந்தையின் தாயாரை காவற்துறைப்  பாதுகாப்பில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More