Home இலங்கை வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் 50 வீதத்திற்கும் அதிகமான நிதி திரும்புகிறது!

வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் 50 வீதத்திற்கும் அதிகமான நிதி திரும்புகிறது!

"நான் ராஜபக்ஸ குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல"

by admin

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் புதன்கிழமை (07.08.24)  பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாஸ ராஜபக்ஸ பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

அதன்போது கோண்டாவில் பகுதியில் BCS மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டார்.

நிகழ்வில் உரையாற்றுகையில்

பெரமுன கட்சியினர் தன்னை தமது கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட அனுகி இருந்தனர். தான் அதனை மறுத்துள்ளேன். தற்போது இளம் அரசியல்வாதியொருவரை வேட்பளாராக களம் இறக்கியுள்ளனர். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடுவதே தனது இலக்கு.

தனது பெயரிலும் ராஜபக்ச உள்ளமையால் நான் முந்தைய அரசாங்கத்தின் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவன் அல்ல. அந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நாட்டு மக்களுக்கும் இந்த அரசாங்கத்துடன் தொடர்புடையவராகவே தன்னை தெரியும். ஆனால் தான் நீதியமைச்சராக சுயாதீனமாகவே இயங்கியதாக கூறியுள்ளார்.

தற்போதுள்ள அரசாங்கத்தின் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கையிழந்துள்ளமையை தான் அறிந்துள்ளதாகவும், அதனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போது நாடாளுமன்ற இருக்கின்றவர்களில் 150க்கும் மேற்பட்டவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட நிதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமான நிதி திரும்புகிறது.

வடக்கு, கிழக்கு அதிகரிகளின் ஒத்துழைப்பு இல்லாமையே அதற்கு காரணம் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More