Home இலங்கை யாழ் சென்றடைடைந்த சிவகங்கை கப்பல்!

யாழ் சென்றடைடைந்த சிவகங்கை கப்பல்!

by admin

இந்திய இலங்கை கப்பல் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16.08.24) 41 பயணிகளுடன்  காங்கேசன்துறை துறைமுகத்தை சென்றடைந்தது.

காங்கேசன்துறையை சென்றடைந்த கப்பலையும் பயணிகளையும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

சிவகங்கை என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காலை புறப்பட்டு, காங்கேசன்துறையை பிற்பகல் சென்றடைந்தது.

தொடர்ந்து கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு நாளைய தினம் சனிக்கிழமை (17.08.24)  காலை புறப்பட்டு பிற்பகல் நாகப்பட்டினம் துறைமுகத்தை சென்றடையும்.

இக் கப்பல் சேவை 18ஆம் திகதியிலிருந்து நாள்தோறும் நாகப்பட்டினத்திலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் கப்பல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More