கடந்த காலத்தில் பல இரத்தக்கiறைகள் உள்ளன அவற்றை நாம் கண்ணீர் விட்டு அழித்துவிட முடியாது மீண்டும் நாம் வாழ்வதற்கு இத்தனை இடர்பாடுகள் எமக்குள் இருந்தாலும் நாம் ஓரணியாக ஒன்று திரள வேண்டும் என திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் வீரமணி அவர்களின் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தனது உரையில் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு நாளும் முடிவல்ல இருக்கிறது, அவற்றைப் பற்றி சிந்திக்கின்ற பொழுது இங்கே உள்ள புகைப்படம் நியாபகம் வருகிறது. தந்தை செல்வா தொடங்கி எவ்வுலகில் இருந்தாலும் இந்த ஊரில் இருந்தாலும் மக்களுடைய பிரச்சினைகளை நாம் படிக்கட்டாக மாற்றி மறக்கப்பட்ட இனத்தை மீண்டும் விழிப்புணர்வுடன் கொண்டு செல்வதற்கு அனைவரும் ஓரணியாக திகழ வேண்டும் என தெரிவித்தார்.

