Home இலங்கை தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

by admin
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை  கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 11 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த 11 கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் ஊடாக கடற்படையினர் நீதிமன்றில் முற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More