Home இலங்கை அவுஸ்திரேலியாவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கையர்

அவுஸ்திரேலியாவில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கையர்

by admin

 

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சென்டிஹர்ஸ்ட் என்ற இடத்தில் தனது விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்றமை தொடா்பாக இலங்கையர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான தினேஷ் குரேரா  என்பவரே இவ்வாறு குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தனது பாதுகாப்பிற்காகவே இவ்வாறு செயற்பட்டதாக அவா் நீதிமன்றில் தெரிவித்த போதும்  அதனை  ஏற்க மறுத்த  விக்டோரிய  உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி அவரது விவாகரத்து பெற்ற மனைவியான  நிலோமி பெரேராவை,      கொலை செய்ததாக குரேரா ஒப்புக்கொண்டுள்ளாா் .

விவாகரத்து பெற்ற மனைவி தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி விரலை வெட்டிவிட்டதாகவும் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக  கோடரியால் பலமுறை தாக்கி அவரை கொலை செய்ததாகவும்  விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

அந்த பெண்ணின் உடலில் 35 காயங்கள் இருந்ததாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளாா்.

எனினும் தாயும் தந்தையும் சண்டையிடுவதை மகளும் மகனும் பார்த்ததாகவும்,  மகன் உதவி கேட்டு அலறிய போது, ​​குரேரா அவரையும் தாக்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 16 வயது மகளும் 17 வயது மகனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து,  தந்தை  தாயை தாக்கியமை குறித்து   விவரித்துள்ளாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More