Home இலங்கை சங்கானையில் ஒரு இரவில் மூன்று வீட்டில் கொள்ளை

சங்கானையில் ஒரு இரவில் மூன்று வீட்டில் கொள்ளை

by admin
யாழ்ப்பாணம் – சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து , பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால், மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என பெயர் குறிப்பிட்டு சந்தேக நபர் ஒருவர் தொடர்பிலான தகவல்களையும் பாதிக்கப்பட்ட தரப்பினர் காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More