Home இலங்கை வட மாகாண ஆளுநர் – ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சந்திப்பு

வட மாகாண ஆளுநர் – ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சந்திப்பு

by admin

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
 யாழ்ப்பாணத்திலுள்ள ஆளூநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.  சுதந்திரமானதும்,  நீதியானதுமான தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என ஆளுநர் இதன்போது கூறினார்.
அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஆளுநர், மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெளிவுப்படுத்தினார்
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More