Home இலங்கை ரணிலுக்கும் அனுரவுக்கும் இடையில் ஒப்பந்தம் என்கிறார் சஜித்!

ரணிலுக்கும் அனுரவுக்கும் இடையில் ஒப்பந்தம் என்கிறார் சஜித்!

by admin

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 2ம் விருப்பு வாக்கு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முதல் சுற்றிலேயே தனது கட்சி வெற்றி பெறும் என்பதால், 2வது விருப்புரிமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கவலைப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதிக்கு கடவுச்சீட்டு அல்லது வீசா வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசாங்கத்தினால் முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேமதாச, கடவுச்சீட்டு மற்றும் வீசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள கடுமையான தாமதங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கு தடையாக மாறி, ஆடைத் துறை மற்றும் சுற்றுலாத்துறையை பாதித்துள்ளது. அரசாங்கத்தின் ஊழல் ஒப்பந்தங்களே இந்த தாமதங்களுக்கு காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.

அனுரவுடன் இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்துமாறும், கடவுச்சீட்டு மற்றும் வீசா வழங்கும் நடைமுறைகளை சரிசெய்வதில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் பிரேமதாச கோரியுள்ளார். இந்த நபர்களுக்கு நாட்டின் பொறுப்பு வழங்கப்படுமானால் மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என தெரிவித்த அவர், ரணில்-அநுரவின் பெரும் சதியை முறியடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More