1
சனத் ஜயசூரியவின் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளா் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்துடன் பதவி விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
Spread the love