Home இலங்கை ஒரு கோடி ரூபாயை வழிப்பறி செய்த குற்றத்தில் இருவர் கைது

ஒரு கோடி ரூபாயை வழிப்பறி செய்த குற்றத்தில் இருவர் கைது

by admin

 

யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்ற குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அவர் நேற்றை தினம் புதன்கிழமை தனது காணியை விற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வீதியில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணம் , கடவுச்சீட்டு , இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பணத்தினை பறிக்கொடுத்தவர், மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில், சந்தேகநபர்கள் ஊரெழு பகுதியில் மறைந்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் , கையடக்க தொலைபேசி  உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More