Home இலங்கை கிராம சேவையாளரை இடமாற்ற வேண்டாம் என கோரி போராட்டம்

கிராம சேவையாளரை இடமாற்ற வேண்டாம் என கோரி போராட்டம்

by admin

 

கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி யாழ்ப்பாணம், வரணி – நாவற்காடு பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுத்தனர்.

நாவற்காடு – கிராம அலுவலராக கந்தசாமி தர்மேந்திரா என்பவர் கடமையாற்றி வந்தார். அவர் நாவற்காடு பிரதேசத்திற்கு கிராம அலுவலராக நியமனம் பெற்று 6 ஆறு மாதங்கள் பூர்த்தியாகாத நிலையில் அவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி பிரதேச செயலரை சந்தித்திருந்தனர். எனினும் மக்களின் கோரிக்கைக்கு பிரதேச செயலரால் உரிய தீர்வு வழங்கப்படாத நிலையில் பிரதேச மக்கள் இணைந்து  தீர்வு கோரி இன்றையதினம் நாவற்காடு பொதுமண்டபத்தில் அமைந்துள்ள கிராம அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More