Home இலங்கை கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி உயிரிழப்பு

கட்டுமரம் கவிழ்ந்ததில் கடற்தொழிலாளி உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது கட்டுமரத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில் , அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.  சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More