Home இலங்கை யாழுக்கு கடத்தி வரப்பட்ட மாடுகள் – ஒரு மாடு உயிரிழப்பு – இருவர் கைது

யாழுக்கு கடத்தி வரப்பட்ட மாடுகள் – ஒரு மாடு உயிரிழப்பு – இருவர் கைது

by admin

 

கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 19 மாடுகள் உயிருடனும் ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை லொறி ஒன்றில் 20 மாடுகளை ஏற்றி யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வந்துள்ளனர்.  அது தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மீசாலை பகுதியில் வைத்து லொறியை வழிமறித்துள்ளனர்.
அதன் போது லொறியில் இருந்த 20 மாடுகளில் ஒரு மாடு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதிக மாடுகளை ஏற்றியமையால் நெரிசலினால் மாடு உயிரிழந்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து மாடுகளை கடத்தி வந்த லொறி சாரதி மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்ததுடன் , மாடுகளையும் லொறியையும்  காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்
Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More