Home இலங்கை ராஜபக்ஸ குடும்பத்தை தேர்தலில் இருந்து ஓரம் கட்டிய அனுரவும் NPPயும்!

ராஜபக்ஸ குடும்பத்தை தேர்தலில் இருந்து ஓரம் கட்டிய அனுரவும் NPPயும்!

by admin

பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்து தீவிர அரசியலில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தின் சகோதரர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, பல தசாப்தங்களுக்குப் பின்னர் முதன்முறையாக ராஜபக்ஸ சகோதரர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது முக்கிய விடயமாக அரசியலில் பேசப்படுகிறது.

நாமல் ராஜபக்ஸ தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகவும் போட்டியிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோர் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More