Home இலங்கை உதயச்சந்திரா பிணையில் செல்ல அனுமதி.

உதயச்சந்திரா பிணையில் செல்ல அனுமதி.

by admin
கைது செய்யப்பட்ட வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா இன்றைய தினம் சனிக்கிழமை(19) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மனுவல் உதயச்சந்திரா வைத்திய தேவைகளுக்காக நேற்று மன்னாரில் இருந்து  கொழும்பிற்கு சென்ற நிலையில் அவரை கைதுசெய்ய  காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்போது அவர் வீட்டில் இல்லாத நிலையில் ”மனுவல் உதயச்சந்திராவை கைதுசெய்யவே வந்துள்ளதாகவும்  அவர் வருகை தந்தவுடன் உடனடியாக  காவல்நிலையத்திற்கு அழைத்து  வருமாறும் உறவினர்களிடம்  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் இன்று (19) காலை வைத்திய தேவைகள் முடிந்து வீட்டிற்கு  திரும்பிய உதயச்சந்திரா  , மன்னார்  காவல்நிலையத்தில்  முன்னிலையாகிய போது காவல்துறையினரால்  கைது செய்யப்பட்ட அவா்     விசாரணையின் பின்னர்   இன்றைய தினம் மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில்  முன்னிலப்படுத்தப்பட்டாா்.
 இதன் போது அவரை ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  மாங்குளம் நீதிமன்ற விசாரணை ஒன்றுக்கு  முன்னிலையாகாத நிலையிலே அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாக தெரிய வருகின்றன.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More