Home இலங்கை இராமநாதன் அர்ச்சுனாவை   கைது செய்யுமாறு  உத்தரவு.

இராமநாதன் அர்ச்சுனாவை   கைது செய்யுமாறு  உத்தரவு.

by admin

இன்றைய தினம் புதன்கிழமை(30)  மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது   நீதிமன்றத்தில் முன்னிலையாகாத   சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான்    காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

-மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா  விற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட  வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் இரண்டு சரீர பிணையில்   விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின்  வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் புதன்கிழமை(30) மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்ற நிலையில் அவர் மன்றில் முன்னிலையாக வில்லை. மேலும் இரண்டு பிணைதாரர்களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பினையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலையாக்குமாறு  காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More