Home இலங்கை தள்ளாடி சந்திக்கு அருகில்  கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.

தள்ளாடி சந்திக்கு அருகில்  கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது.

by admin

 

மன்னார் மாவட்ட  காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவு    உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார்   தள்ளாடி சந்திக்கு அருகில் வைத்து  மன்னார் மாவட்ட காவல்துறை  குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத் தர்களால் கேரள கஞ்சா பொதியுடன்  நேற்று (18) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 04 கிலோ 315 கிராம்  எடை கொண்ட கேரள கஞ்சா பொதி இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கள்ளி கட்டைகாடு பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என  தெரிய வந்துள்ளது.மன்னார் காவல்துறையினரின் விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More