Home இலங்கை ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்!

ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்!

by admin

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கமானது அறுதிப் பெருமபான்மையுடன் உள்ளது. இந்த அரசாங்கம் மக்கல் மத்தியில் தனது இருப்பை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டியுள்ளது.

அதனடிப்படையில் விரைவாக ஒரு அரசியலமைப்பை கொண்டு வர வாய்ப்புள்ளது. அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்.

குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் தேசியம் பேசுகின்ற 10 பேராவது எதிர்க்காவிட்டால் தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும். அதன் பின் நாம் தேசியம் பேசி பயனில்லை.

எனவே, தமிழ் தேசிய கட்சிகள ஒன்று சேர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்த்து வடக்கு – கிழக்கு தமிழர் தேசம் என அங்கீகரிக்கப்பட்ட, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையுடன கூடிய ஒரு அரசியலமைப்பை கோர வேண்டும்.

சமஸ்டி ஊடாக மட்டுமே அதனை வழங்க முடியும். எனவே அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும்.

அத்துடன், ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு கொணடு வந்தால் அதனை சர்வசன வாக்குரிமைக்கு விட வேண்டும். இதன் போது வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை உணர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும்.

தமிழ் தேசிய கட்சிகள மீது உள்ள வெறுப்பால் பாடம் புகட்ட வேண்டும் என கடந்த தேர்தல்களில் வேறு கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் வாக்களித்து இருந்தாலும கூட, அரசியலமைப்பு விடத்தில் ஒன்று பட வேணடிய தேவை உள்ளது. இது எமது அடிப்படை உரிமைப் பிரச்சனை. அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேணடும்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதன்பின்  கட்சிகள் தமிழ் தேசியம் என்ற பெயரை வைத்திருப்பதிலும், தேசியம் பேசுவதிலும் எந்த பயனும் இல்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.

அதன் பின் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனசனமும் இல்லை. 76 வருட போராட்டம் தோல்வி கண்டதாக முடியும். இந்த ஆபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Spread the love

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More