மின் விநியோகத் துண்டிப்பு மேலும் தொடருமா? இல்லையா? என்பது குறித்து இன்று (13/2/2025) இன்று காலை 10.00 மணியளவில் தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதன் படி, இன்று நாடு முழுவதும் ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க, இலங்கை மின்சார சபை 10 மற்றும் 11ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஒன்றரை மணி நேரம் மின் விநியோகத் துண்டிப்பை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் நாளை (14) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இந்தப் புதிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
இதன்படி, வெவ்வேறு இடங்களில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.