Home இலங்கை பிணையில் விடுதலையான யோஷித ராஜபக்ச மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பிணையில் விடுதலையான யோஷித ராஜபக்ச மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

by editorenglish

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

2012 மற்றும் 2015 க்கு இடடைப்பட்ட காலத்தில், இரத்மலானாவின் சிரிமல் வத்த உயன மற்றும் தெஹிவளை பகுதிகளில் 80 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்களை எவ்வாறு கையகப்படுத்தினார்கள் என்பதை வெளியிடத் தவறியதற்காக சட்டமா அதிபர் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More