93
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாண காவல்துறை சிறப்பு அதிரடிப் படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் காவல்நிலையப் பிரிவுக்கு உட்பட்ட ஏ 09 வீதியில், காவல்துறை சிறப்புப் படையின், யாழ்ப்பாண முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சோதனை நடத்திய போது போதைப்பொருள் அடங்கிய 100 மாத்திரைகளை வைத்திருந்த ஒரு சந்தேக நபரைக் கைது செய்து, யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர். யாழ்ப்பாணக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love