Home உலகம் ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கவும்

ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கவும்

by admin

 

பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ்  பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்குமாறு பங்களாதேஷ் அரசாங்கம்  சர்வதேச  காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேஷ் காவல்துறையின் தேசிய மத்திய பணியகத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம்   பிரதமர் ஷேக் ஹசீனாவின்  அரசாங்கத்திற்கு எதிராக பங்களாதேஷில் பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்ததனையடுத்து  ஷேக் ஹசீனா பதவி நீக்கப்பட்டதுடன் அவர் இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

அவரை மீண்டும்  பங்களாதேஷிற்கு அழைத்து வந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக  பங்களாதேஷ் காவல்துறையினரினால் சர்வதேச காவல்துறையினரிடம்  இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More