Home இலக்கியம் இயற்கையின் வீரியங்களென குழந்தைகள் வளர்க – சி.ஜெயசங்கர்

இயற்கையின் வீரியங்களென குழந்தைகள் வளர்க – சி.ஜெயசங்கர்

by admin

 

 

குழந்தைகள் பந்தையகுதிரைகள் அல்லர்

வெற்றிக் கம்பங்களை  நோக்கி

விரசித்துரத்துவதற்கு

 

குழந்தைகள் எடுத்தாடும்  காவடிகள் அல்லர்

குதித்தாடி  குரவைப் போட்டு

நேர்ச்சை வைப்பதற்கு

 

குழந்தைகள் காட்சிப்பொருட்கள் அல்லர்

ஏற்றி எடுத்து

காட்டாப்புக் காட்டுவதற்கு

 

குழந்தைகள் இறப்பர்பந்துகள் அல்லர்

திக்குகள் எங்கும்

எறிந்தெறிந்து விளையாடுவதற்கு

 

குழந்தைகள் கற்பனை பறவைகள் அல்லர்

பெரியவர் எண்ணங்களை

ஏற்றிப் பறக்க வைப்பதற்கு

 

குழந்தைகள் ஆய்வுக்கூட உயிரிகள் அல்லர்

இரசாயனங்களில் வளர்வதற்கு

 

குழந்தைகள் முழுமனிதர்களாகும்

உயிர் மூச்சுக் கொண்ட மனித  முளைகள்

 

குழந்தைகள்  இயல்பாய் வளரும் மூலிகைகள்

மூலிகைகள் அறிவோம்

மூலிகை இயல்புகள் அறிவோம்

இயற்கையின் வீரியங்களென குழந்தைகள் வளர்க

 

சி.ஜெயசங்கர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More