Home இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள்

by editorenglish

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், எரிபொருள் வழங்கலில் தடை ஏற்படலாம் என்ற எண்ணத்தில் இன்று (28/02/2025) கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

1,400 எரிபொருள் நிலையங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெற்றோலிய விற்பனையாளர்கள் சங்கமானது கமிஷன் விகிதங்கள் தொடர்பாகப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இன்றிரவு முதல் புதிய எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் கடனில் எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்தவும் சங்கம் முடிவு செய்துள்ளது.

விநியோகஸ்தர்களுக்கான 3% கமிஷனை இடைநிறுத்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது எரிபொருள் நிலைய இயக்குநர்களுக்கு நிதிச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக சங்கம் கூறுகிறது.

இது தொடர்பில் நுகர்வோருக்கு ஏற்படும் எந்தவொரு சிரமத்திற்கும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் மற்றும் நிர்வாகமே பொறுப்பாகும் என்றும், அவர்களின் முடிவுகளே இந்த நெருக்கடிக்குக் காரணம் என்றும் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகமானது நிறுத்தப்படவுள்ள நிலையில், விநியோகத்தில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்துக் கவலைகள் அதிகரித்து வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More