Home இலங்கை கொம்பனி வீதி இரவு விடுதி மோதல் – நால்வருக்கு விளக்க மறியல்!

கொம்பனி வீதி இரவு விடுதி மோதல் – நால்வருக்கு விளக்க மறியல்!

by admin

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களும் ஏப்ரல் 1 ஆம் திகது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதன்படி அவர்கள் நேற்று (26.03.25) கொழும்பில் உள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்

இதேவேளை இது தொடர்பாக யோஷித ராஜபக்ச கடந்த 25 ஆம் திகதி கொம்பனி வீதி பொலிஸ்சாரிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருந்ததுடன் இந்த மோதலில் சம்பவ இடத்தில் இருந்த ஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டிருந்தார்

இதேவேளை காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related

Spread the love

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More