Home இந்தியா மோடி ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்!

மோடி ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார்!

by admin

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்துக்கொண்டு     தமிழகம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தின் ராமநாதபுர மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று (06) திறந்து வைக்கிறார்.

பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.

இந்நிலையில் தனது இலங்கை பயணம் தொடர்பில் இந்திய பிரதமர் X தளத்தில் பதிவொன்றை வௌியிட்டுள்ளார்.

“இலங்கைக்கான எனது பயணத்தின்போதான அன்பான அரவணைப்புக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கொழும்புக்கான பயணமாக இருந்தாலும் சரி, அநுராதபுரத்துக்கான விஜயமாக இருந்தாலும் சரி இரண்டுமே நமது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாசார, ஆன்மீக மற்றும் நாகரீக உறவுகளை மீள உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. இந்த விஜயம் நமது இருதரப்பு உறவுகளுக்கு நிச்சயமாக உத்வேகத்தை தரும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More